இந்திய கிரிக்கெட் அணியின் கேம் பிளான் என்ன? - கம்பீர், அகார்கர் விவரிப்பு
மும்பை: வரும் சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் தங்களது திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சார்ந்து தான் வைத்துள்ள எதிர்கால திட்டம் முதல் பல்வேறு தகவல்களை கம்பீர் பகிர்ந்தார். “முக்கிய தொடர்களில் தங்களது பங்கு என்ன என்பதை ரோகித் மற்றும் கோலி நிரூபித்துள்ளனர். அது டி20 உலகக் கோப்பை அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் இருவரும் தங்களது அணியில் அவசியம் இடம்பெற வேண்டுமென எந்தவொரு அணியும் விரும்பும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


