அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஐசிசி-க்கு ரூ.167 கோடி இழப்பு?

மும்பை: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.167 கோடி.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் பொருட்டு அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக பிரத்யேகமாக அவசரம் அவசரமாக அங்கு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மைதானங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும், இந்திய அணி உட்பட பல அணிகளின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்தன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.