டிஎன்பிஎல்: அனிருத் அரை சதம் துணையுடன் மதுரையை வீழ்த்தியது திருப்பூர் அணி!
கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், 2-வது கட்ட லீக் போட்டிகள் இன்று (ஜூலை 13) தொடங்கியது.
இன்று மதியம் தொடங்கிய முதல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணியின் சார்பில், கேப்டன் ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் லோகேஸ்வர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்த நிலையில் லோகேஸ்வர் 4 ரன்களுக்கு புவனேஸ்வரன் பந்துவீச்சீல் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


