“விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் கொண்டாடப்படுவார். ஏனெனில்...” - ஷாகித் அப்ரிடி
லாகூர்: "விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், இந்திய மக்கள் கொடுக்கும் அன்பையும் விருந்தோம்பலையும் மறந்துவிடுவார். இந்திய அணி 2025-ல் பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும்" என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் திட்டமிடப்பட்டு உள்ளதாக சொல்லப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. அரசின் முடிவை ஏற்போம் என சொல்லப்பட்டு வந்த சூழலில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி வசம் பிசிசிஐ கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


