3-வது டி 20-ல் ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி
ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3-வது ஆட்டத்தில் ஹராரேநகரில் இன்று மோதுகின்றன.
டி 20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் லெவனில் மாற்றங்கள் இருக்கக்கூடும். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்பி உள்ளதால் அபிஷேக் சர்மாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.