இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் இந்தியா உடன் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. போட்டிகள் ஜூலை 27ல் தொடங்குகிறது. இந்த நிலையில் தான், சனத் ஜெயசூர்யா நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், இலங்கை அணி டி20 உலகக் கோப்பையயில் மோசமாக தோல்வியடைந்ததை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இலங்கை படுமோசமான தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


