சேப்பாக்கத்தில் முதல் டி 20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இன்று மோதல்

சென்னை: தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய மகளிர் அணி அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றம் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதற்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடர் சிறந்த பயிற்சியாக அமையக்கூடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.