“என் பாதையை நான் தேர்வு செய்தேன்” - பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 14 வயது இந்திய வீராங்கனை
எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 14 வயதான இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு தேர்வாகி உள்ளார். இதன் மூலம் தேசத்துக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென்ற அவரது கனவு நிஜமாகி உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 111 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் மிக இளம் வயது வீராங்கனையாக தினிதி அறியப்படுகிறார். கடந்த 2022 ஆசிய போட்டிகளிலும் இவர் பங்கேற்று இருந்தார். 200 மீட்டர் ஃப்ரிஸ்டைல் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


