“உங்களுடன் பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்” - ராகுல் திராவிட் பிரியாவிடை

பார்படாஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் ராகுல் திராவிட். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் விளையாடி உள்ளது.

அவரது பயிற்சியாளர் பணி அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணி வீரர்களிடம் அவர் தெரிவித்தது. “நவம்பரில் உலகக் கோப்பை இறுதியில் தோல்வியை தழுவிய பிறகு எனக்கு போன் செய்து பணியில் தொடருமாறு சொன்ன ரோகித்துக்கு இந்நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.