பார்படாஸில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி புறப்படுவதில் தாமதம்
பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் இருந்து அவர்கள் வரவேண்டிய விமானம் அங்கு சென்றடையவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஏர் இந்தியாவின் சிறப்பு விமானமான ‘AIC24WC’ ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 வேர்ல்ட் கப் என்பதன் சுருக்கம்தான் இது. அந்த விமானத்தில் இந்திய வீரர்கள், அணியின் உறுப்பினர்கள், வீரர்களின் குடும்பத்தினர், பிசிசிஐ பிரதிநிதிகள் மற்றும் புயல் காரணமாக அங்கு சிக்கிய இந்திய ஊடக நிறுவன ஊழியர்கள் வர உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


