குரூப் சுற்றுகளில் கோல் பதிவு செய்யத் தவறிய ரொனால்டோ, மெஸ்ஸி!

சென்னை: நடப்பு யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். இருவரும் இந்த தொடர்களின் முதல் சுற்று போட்டிகளில் கோல் பதிவு செய்யவில்லை. இருந்தும் போர்ச்சுகல் அணி 'யூரோ கோப்பை' தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கும், அர்ஜென்டினா அணி 'கோபா அமெரிக்கா' தொடரின் காலிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

ரொனால்டோ: 39 வயதான ரொனால்டோ யூரோ கோப்பையின் குரூப் சுற்றில் கோல் பதிவு செய்யாமல் கடந்துள்ளது இதுவே முதல் முறை. இதில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகளின் கால்பந்து அணிகள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடும். இந்தத் தொடரில் கடந்த 2004 முதல் அவர் விளையாடி வருகிறார். யூரோ கோப்பை அரங்கில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக அறியப்படுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.