வெற்றிக்கு வித்திட்ட மூவர் கூட்டணி - திருப்புமுனை தருணங்கள் @ டி20 உலகக் கோப்பை

பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. த்ரில்லும் திருப்பங்களும் மிகுந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. விராட் கோலியும், அக்சர் படேலும் பேட்டிங்கில் கைகொடுக்க, பவுலிங்கில் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிறப்பாக பங்களித்தனர். டி20 உலகக் கோப்பை அரங்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

கையை விட்டுச் சென்ற போட்டியை காப்பாற்றி கரைசேர்த்து சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த பெருமை வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணிக்கே சேரும். எப்படியென்றால், 177 ரன்கள் இலக்குடன் இரண்டாவது பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தார் டிகாக். ஸ்டப்ஸ் உடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவரை அக்சர் படேல் அவுட் செய்தார். தொடர்ந்து வந்த கிளாசன் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். அவர் 39 ரன்களில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.