கபில்தேவ், தோனி வரிசையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தின் கேப்டன்சி - ஒரு பார்வை

இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அப்படி சொல்வதைவிட கபில்தேவ், தோனி வரிசையில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. இதனை இப்படி சொல்வதே சரியாக இருக்கும். ஏனென்றால், இன்று இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வெல்ல ரோகித்தின் கேப்டன்சி மிக முக்கியமாக அமைந்தது.

அதற்கு நேற்றைய போட்டியையே உதாரணமாக சொல்லலாம். 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிளாசன், டேவிட் மில்லர் என உலகின் அபாயகரமான டி20 வீரர்கள் களத்தில் இருந்தனர். இக்கட்டான இந்த நிலையில் துவண்டு விடாமல் சரியான பந்துவீச்சாளர்களை பந்துவீச வைத்து எதிரணியை சாய்த்தார் ரோகித். 16வது ஓவரில் பும்ராவை கொண்டு வீசவைத்தது எல்லாம் முக்கியமான நகர்வு. ஏனெனில், அதிரடியாக விளையாடிய கிளாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினால் மட்டுமே ஆட்டத்தில் மாற்றம் வரும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.