சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 603 ரன்கள் குவித்து சாதனை

சென்னை: தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 98 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்தது.ஸ்மிருதி மந்தனா 149, ஷபாலி வர்மா 205 ரன்கள் விளாசினர். சுபா சதீஷ் 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42, ரிச்சா கோஷ் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.