சூர்யகுமார், பும்ராவினால் வெற்றி: ரோகித், கோலி என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 8’ போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்றதற்கு பிரதான காரணம் இருவரே. அதாவது ஒருவர் சூர்யகுமார் யாதவ், மற்றொருவர் ஜஸ்பிரித் பும்ரா.
சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். ரிஷப் பந்த் 20, ஹர்திக் பாண்டியா 32 என இந்திய அணி 181 ரன்களை எட்டியது. ஆனால், முதலில் ஃபரூக்கியிடம் ரோகித் சர்மா, 13 பந்துகளில் 8 ரன்கள் என்று அறுவையைப் போட்டுவிட்டு அவுட் ஆனார். கூடுதல் ஃபுல் லெந்த் பந்து வேகம் குறைக்கப்பட்ட பந்தை கொடியேற்றி வெளியேறினார். விராட் கோலியும் செம பிளேடு போட்டு 24 பந்துகளில் 24 ரன்களையே எடுத்து ரஷித் கானின் அற்புதமான பவுலிங்குக்கு ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


