நிக்கோலஸ் பூரன் விளாசலில் மே.இ.தீவுகள் அபார வெற்றி | T20 WC
செயின்ட் லூசியா: ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் கடைசிலீக் ஆட்டத்தில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் -ஆப்கானிஸ்தான் மோதின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பைவரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகளின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53பந்துகளில், 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார். ஜான்சன் சார்ல்ஸ் 27 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், ஷாய்ஹோப் 25 ரன்களும், கேப்டன் ரோவ்மன் பொவல் 26ரன்களும் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது முதல் 6 ஓவர்களையும், கடைசி 5 ஓவர்களையும் குறிவைத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அந்த அணிபவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன் வேட்டையாடிய அணி என்ற சாதனையை மேற்கு இந்தியத் தீவுகள் படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணிபவர்பிளேவில் 91 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி முறியடித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


