“போலி ஆல்ரவுண்டர்கள், பேட்டிங் ஆடத் தெரியாதவர்கள்” - பாக். அணி மீது வாசிம் அக்ரம் தாக்கு

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 119 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டிய பிறகு அந்த இலக்கைக் கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கொதிப்படைந்து பேசியுள்ளனர்.

வாசிம் அக்ரம் கூறும்போது, “அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர். நான் அவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது. முகமது ரிஸ்வானுக்கு ஆட்டம் பற்றிய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லை. இப்திகார் அகமதுக்கு ஒரே ஷாட் தான் ஆடத்தெரியும். இவர் பாகிஸ்தான் அணியில் வருடக்கணக்கில் இருக்கிறார். ஆனால், எப்படி பேட் செய்வது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.