தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் .. இலங்கைக்கு எதிராக தொடங்கிய பயணம் இன்றுடன் முடிவு!!

தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் .. இலங்கைக்கு எதிராக தொடங்கிய பயணம் இன்றுடன் முடிவு!!

நடப்பு வருடத்தில் பல முன்னாள் வீரர்கள் சர்வதேச அளவிலான அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வினை அறிவித்து வருகின்றனர். இந்த வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இந்தியாவின் கேதர் ஜாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற இவர், 2014ல் ஒரு நாள் வடிவிலும், 2015ல் T20 வடிவிலும் தனது அறிமுக ஆட்டத்தை விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தவறிய இவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலேயே அதிக கவனம் செலுத்தினார். இதுவரை இவர், டி20யில் 9 போட்டிகளில் 122 ரன்களும், 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்களும், முதல் தர போட்டிகளில் 186 இன்னிங்ஸில் 1557 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

The post தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் .. இலங்கைக்கு எதிராக தொடங்கிய பயணம் இன்றுடன் முடிவு!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.