“இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்” - கவுதம் கம்பீர்
அபுதாபி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அடுத்த பயிற்சியாளருக்கான ரேஸில் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் சூழலில் அவரே வெளிப்படையாக இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்தும் வாரியம் ஆஸ்திரேலியர்கள் யாரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


