T20 WC | “இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது” - ரிஷப் பந்த்

நியூயார்க்: சுமார் 527 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட உள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி, மிக மோசமாக காயமடைந்த நிலையில் தற்போது அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

26 வயதான இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த், கடந்த 2017 முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 33 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தமாக 4,123 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2022 டிசம்பரில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு கார் விபத்தில் சிக்கினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.