“அணியில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டார்கள்” - கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெருமிதம்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியை 19.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக பந்து வீசி டிராவிஸ் ஹெட்டை ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்டாக்கினார்.

இதையடுத்து அபிஷேக் சர்மாவை (3), வைபவ் அரோரா வெளியேற்ற தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது ஹைதராபாத் அணி. எனினும் ராகுல் திரிபாதி தனது அதிரடியால் சற்று அச்சுறுத்தல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களில் ரன் அவுட் ஆக மீண்டும் சரிவை சந்தித்தது ஹைதராபாத் அணி. நிதிஷ் குமார் ரெட்டி (9), ஷாபாஷ் அகமது (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் மிட்செல் ஸ்டார்க் பெவிலியனுக்கு திருப்பினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.