சிறந்த பந்து வீச்சின் மூலம் தன் மீதான விமர்சனங்களை ம்யூட் செய்த ஸ்டார்க்!

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு.

குவாலிபையர் போட்டியில் ஸ்பார்க் உடன் வீசிய அவர், முதல் ஓவரிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை போல்ட் ஆக்கினார். அடுத்ததாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் நிதிஷ் ரெட்டி மற்றும் ஷாபாஸ் அகமது விக்கெட்டை கைப்பற்றினார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதன் பலனாக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.