“வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” - இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ஹர்பஜன் சிங் விருப்பம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

தலைமைப் பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "நான் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வேனா என்று கேட்டால் தெரியவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது வீரர்களுக்கு ட்ரைவ் ஆட சொல்லித் தருவதோ, புல் ஷாட் ஆட சொல்லித்தருவதோ கிடையாது. இதெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். பயிற்சியாளர் பதவி என்பது மேலாண்மை திறன் பற்றியது. கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதற்கு திருப்பித் தர வாய்ப்பு கிடைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.