‘சரித்திர’ ஆர்சிபி-யிடம் சிஎஸ்கே சரணடைந்த கதை சொல்லும் சேதி என்ன?
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சரித்திர சாதனை படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை (மே 18) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் அது நெட் ரன் ரேட் அடிப்படையில் பெற வேண்டுமென்ற என்ற நெருக்கடி நிலையில் இருந்தது. மறுபக்கம் மழையோடும் ஆர்சிபி போராட வேண்டியிருந்தது.
இந்தப் போட்டியில் மழையினால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது சிஎஸ்கே கூடுதலாக 10 ரன்கள் எடுத்திருந்தாலோ கதையே மாறி இருக்கும். அதற்கு முன்னதாக ஆர்சிபி பெற்ற தொடர் வெற்றிகள் அந்த அணிக்கு உத்வேகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் காரணமாகவே சிஎஸ்கே-வை வீழ்த்திய பிறகு ஆர்சிபி அணியினர் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


