“ஓய்வு முடிவு சுனில் ஷேத்ரிக்கு அமைதியை கொடுக்கட்டும்” - விராட் கோலி வாழ்த்து
புதுடெல்லி: "சுனில் ஷேத்ரி அருமையான வீரர். ஓய்வு முடிவு குறித்து எனக்கு முன்பே மெசேஜ் செய்திருந்தார். இம்முடிவுக்கு அவருக்கு அமைதியை கொடுக்கும் என நம்புகிறேன்." என்று அவருடைய சிறந்த நண்பரான விராட் கோலி கூறியுள்ளார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வரும் ஜூன் 6-ம் தேதி குவைத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக நேற்று சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக அறிவித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


