“ஐபிஎல் தொடரை வைத்து இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது” - ஜெய் ஷா திட்டவட்டம்
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணித் தேர்வு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விராட் கோலியை ஓரங்கட்ட நடைபெற்ற முயற்சி ரோஹித் சர்மாவினால் தடுத்து நிறுத்தப்பட்டது. காரணம், கோலியை உட்கார வைத்தால் ரோஹித் சர்மா ரசிகர்களின் சாபத்தைப் பெற வேண்டும். ஏனெனில் ‘கோலி இல்லை என்றால் ரோஹித் மட்டும் எதற்கு?’ என்ற கேள்வி வரும் என்று ரோஹித்துக்கு தெரியும்.
இந்நிலையில், ஐபிஎல் ஆட்டங்களை வைத்து மட்டும் அணியைத் தேர்வு செய்ய முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் ஜெய் ஷா கூறும்போது, “தற்போது தேர்வாகியுள்ள அணியில் ஃபார்ம் மற்றும் அனுபவத்துக்கு இடையே சமநிலை உள்ளது. ஐபிஎல் ஆட்டத்திறன் ஸ்கோர்கள், விக்கெட்டுகளை மட்டும் வைத்து அணித் தேர்வாளர்களால் தேர்வு செய்ய முடியாது. வெளிநாட்டில் ஆடிய அனுபவமும் தேவை.” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


