பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இந்திய அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தேர்வு நேற்று டெல்லியில் நடைபெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


