பஞ்சாப் அசத்தல் பவுலிங்: ராஜஸ்தான் அணி 144 ரன்கள் சேர்ப்பு @ ஐபிஎல்

கவுகாத்தி: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்துள்ளது.

கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியோடு நடையைக்கட்டி அதிர்ச்சி கொடுத்தார். ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக இறங்கிய டாம் கோஹ்லர்-காட்மோர் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் அதே 18 ரன்களோடு முடித்துக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.