அபிஷேக், டிரிஸ்டன் அதிரடி - லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்துள்ளது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட். அடுத்து கைகோத்த அபிஷேக் போரல் - ஷாய் ஹோப் அதிரடி காட்டினர். அபிஷேக் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 38 ரன்களில் அவுட்டானார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.