ஃபீல்டிங் இடையூறு... - ஜடேஜா அவுட்டானது குறித்து மைக் ஹஸ்ஸி கருத்து
சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்த காரணத்தால் ஆட்டமிழந்தார். மூன்றாவது நடுவரின் பரிசீலனையில் அவர் அவுட் கொடுக்கப்பட்டார். அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்தது.
“நான் அதை ஆட்டத்தின்போது பார்த்திருந்தேன். அதனை மிகவும் க்ளோஸாக நான் பார்க்கவில்லை. அவர் ரன் எடுக்க முயன்று திரும்பியிருந்தார். அதனால், அவர் ஆங்கிள் மாறி இருக்கலாம். ஆனால், ஆங்கிளை மாற்ற வேண்டுமென அவர் முயற்சிக்கவில்லை. இதை நான் இரண்டு பக்கமும் பார்க்கிறேன். அவர் எங்கிருந்து திரும்பி செல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். நடுவர் அவுட் கொடுத்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திசையை மாற்றி ஓடக் கூடாது என்றுதான் விதியும் சொல்கிறது. அதனால் அது சரியான தீர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால், நான் அதில் உறுதியாக இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


