T20 WC | “கோலியை தொடக்க ஆட்டக்காரராக களம் காணச் செய்யலாம்” - கங்குலி யோசனை

புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களம் காண செய்யலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. 12 போட்டிகளில் ஆடி 634 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 70.44 என உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 153.51 என உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.