“கவலைப்படாதே... நான் இருக்கிறேன் என்பார் கம்மின்ஸ்!” - நடராஜன் பகிரும் சுவாரஸ்யங்கள்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன். இந்நிலையில், நடப்பு சீசனின் சுவாரஸ்ய விஷயங்கள் மற்றும் டி20 உலகக் கோப்பை அணியில் தனக்கான வாய்ப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“இந்த சீசனில் பவுலர்கள் பாவம் இல்லையா? அணி 200+ ரன்கள் எடுத்தால் அது சேஃப் என நம்பி விளையாட முடியாது. அந்த அளவுக்கு ஆடுகளம் உள்ளது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையிலான ஆட்டத்தை பாருங்கள். 260+ ரன்கள் சேஸ் செய்யப்படுகிறது. அந்த ஆட்டமே வீடியோ கேம் போல இருந்தது. இந்த மாதிரியான ஆடுகளங்களில் சிறப்பாக ஒரு பவுலர் செயல்பட்டால், அவர் எங்கு சென்றாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை கிடைக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.