“தோனிக்கு பதில் ஒரு பவுலரைச் சேருங்கள்; 9ம் நிலையில் இறங்க அவர் தேவையில்லை” - ஹர்பஜன் சிங் காட்டம்
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பார்த்தது போலவே கணிப்புகளுக்கு ஏற்ப சிஎஸ்கே வென்றதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. பஞ்சாப் கிங்ஸ் உடனான 2 ஆட்டங்களில் ஒன்றில் பஞ்சாப் வென்றால் இன்னொன்றில் அவர்கள் தோற்பார்கள் என்பது தெரிந்ததே. அதோடு நேற்று சிஎஸ்கே தோற்றிருந்தால் எல்.எஸ்.ஜி, மேலே செல்ல சிஎஸ்கே 5ம் இடத்துக்கு இறங்கியிருக்கும். அங்கிருந்து பிளே ஆஃப் செல்வது கடினம்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்து 200 ரன்கள் பக்கம் குவித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே தட்டுத் தடுமாறியிருக்கும். அதற்குப் பதில் சிஎஸ்கேவை முதலில் பேட் செய்ய அழைத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நினைத்திருக்கும் என்று சிந்திக்க முடியவில்லை. ஏனெனில் 2வதாக பஞ்சாப் இலக்கை விரட்டும் போது துஷார் தேஷ்பாண்டேவுக்கு பந்துகள் அருமையாக ஸ்விங் ஆகின என்பது ஒரு புறம். அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் நீங்கலாக மற்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஆட்டமிழந்த விதம் போட்டித்தனமான ஆட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்க முடியவில்லை. தூக்கி எறிந்து விட்டுச் சென்றனர். ஆனால் நேற்று தோனி இறங்கியவுடன் பெரிய சப்தம், ஆரவாரம் எழுச்சி ஆகியவை மண்ணோடு மண்ணாகிப் போனது, முதல் பந்திலேயே கிளீன் பவுல்டு. நல்ல லெந்தில் கொண்டு வந்து போட்டுக்கொடுத்தால் மட்டுமே தோனியினால் அடிக்க முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


