சேசிங்கில் எந்த நிலையிலும் ஆட்டத்தில் இல்லாத லக்னோ - ரமந்தீப் சிங் நாள்! | ஐபிஎல் அலசல்
லக்னோ மைதானம் தான் இந்த ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோர்களுக்கான மைதானமாக இருந்தது ஆனால் அதுவும் நேற்று கொல்கத்தாவால் உடைக்கப்பட்டது. 235 ரன்களைக் குவித்தனர். மீண்டும் சேசிங்கில் எந்தத் தருணத்திலும் வெற்றியை நோக்கி ஆட முடியாமல் முடக்கப்பட்டது லக்னோ. ஒரு அறுவையான ஆட்டமாக மாறிவிட்டது. 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கிறது லக்னோ என்றால் கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதலிடம்தானே செல்லும்!
சுனில் நரைன் 39 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 81 ரன்களை விளாசி இந்த சீசனில் தலையாய பவர் ப்ளே ஹிட்டராக எழுச்சி பெற்றார். ஒரு கட்டத்தில் மிடில் ஓவர்களில் தன் இஷ்டத்திற்கு சிக்ஸர்களை அடித்துக் கொண்டிருந்தார் நரைன். பில் சால்ட் 14 பந்துகளில் 32, ரகுவன்ஷி 26 பந்துகளில் 32. அய்யர் 15 பந்துகளில் 23. கடைசியில் ரமன் தீப் சிங் 6 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 25 என்று ஸ்கோரை எங்கோ கொண்டு போய் விட்டனர். லக்னோவில் இவ்வளவு பெரிய ஸ்கோரை விரட்டுவது எப்போதும் கடினமே.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


