ஐபிஎல் 2024: CSK வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 53 வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய சென்னை அணி 167 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே குவித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது IPL தொடரில் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் (16 முறை) விருதை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (15 முறை) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடுத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post ஐபிஎல் 2024: CSK வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


