8 ஓவரில் 19 டாட் பால், ‘நோ’ பவுண்டரி - சிஎஸ்கே தோல்விக்கு வித்திட்ட பஞ்சாப் ஸ்பின்னர்கள்
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றிற்கு முதல் 2 இடங்களிலிருந்து முன்னேறும் என்பது அறிவிக்கப்படாத முன்முடிவு, ஏனெனில் அதற்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. 3-ல் வென்று 16 புள்ளிகளுடன் முன்னேறி விடும் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம், இருப்பினும் நேற்றைய அவர்களின் ஆட்டம் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணி ஆடியது போல் தெரியவில்லை. காரணம் நேற்று பஞ்சாப் கிங்ஸின் ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹார் வீசிய 8 ஓவர்களை சிஎஸ்கே கையாண்ட விதம் எந்த ஒரு திட்டமிடலும் அற்ற வெட்டித்தனமான கிரிக்கெட்டாக அமைந்ததே.
மும்பை இந்தியன்ஸுக்குப் பிறகு சிஎஸ்கேவை 5 முறை தொடர்ந்து தோற்கடித்த அணியாக பஞ்சாப் கிங்ஸ் திகழ்கிறது. தோனி என்னும் ஒற்றை மனிதனின் ஹீரோ ஒர்ஷிப் அணியாகக் குறுகிவிட்ட சிஎஸ்கே-வின் ‘உண்மை’யான திறமைக்கு நேற்றைய ஆட்டமே சாட்சியம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


