பும்ரா முதல் சாவ்லா வரை... - மும்பையை பதறவைத்த ஜாக் மெக்கர்க் மீண்டும் 15 பந்துகளில் அரைசதம்
புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா சேஸிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் - அபிஷேக் பொரேல் இணை ஓப்பனிங் செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்த ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் இப்போட்டியிலும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் 2024 சீசனின் அதிவேக அரைசதம் என்ற தனது சாதனையை சமன் செய்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


