“ரிஸ்க் எடுக்கணும்!” - கோலியின் ஆட்டத்தை விமர்சித்த கவாஸ்கர்
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விக்கு ஒருவழியாக முடிவுரை எழுதியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 206 ரன்கள் குவித்திருந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி அரை சதம் விளாசி இருந்தார். நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் அவர் குவித்துள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார். 1 சதம் மற்றும் 3 அரை சதங்களை அவர் எடுத்துள்ளார். இருந்தும் அவரது இன்னிங்ஸ் அணுகுமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


