கோலி, ரோகித் சர்மாவின் டி20 எதிர்காலம் எப்படி? - இது யுவராஜ் சிங் பார்வை
துபாய்: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள், சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
2007-ல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரின் அம்பாசிட்டராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். “இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்த வீரர் அவர். இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல அவரது ஆட்டம் நிச்சயம் உதவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


