“பரிசளிப்பு நிகழ்வில் பேசுவதையே மறந்துவிட்டேன்” - வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் நகைச்சுவை!
ஒருவழியாக ஆர்சிபி அணி வெற்றியை நீண்ட இடைவெளிக்கு பிறகு ருசித்துள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு 2வது வெற்றியை ஈட்டியுள்ளது. நேற்று சன்ரைசர்ஸ் அதிரடி பேட்டர்கள் விடுப்பில் சென்றுவிட்டனர் போலும். இம்பாக்ட் வீரர் ஸ்வப்னில் சிங் ஆர்சிபி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். ஏனெனில் பேட்டிங்கில் 6 பந்துகளில் 12 ரன்கள் அவரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிறகு பந்து வீச்சில் மார்க்ரம், அதிரடி மன்னன் கிளாசன் ஆகியோரை வீழ்த்தியதுதான் ஆர்சிபி வெற்றியின் திருப்பு முனை கணங்களாகும்.
இதை விடவும் முக்கியத் தருணம் வில் ஜாக்ஸ், காட்டடி மன்னன் ட்ராவிஸ் ஹெட்டையும் இவருக்கு சற்றும் சளைக்காத அபிஷேக் சர்மாவை யஷ் தயால் வீழ்த்தியதும் ஆர்சிபிக்கு எப்போதும் இல்லாத வகையில் பந்து வீச்சில் நல்ல தொடக்கத்தை அளித்தது. மேலும் முகமது சிராஜ் உள்ளிட்ட மற்றவர்கள் அதிரடி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 4 ஓவர்கள் 20 ரன்கள் என்று தப்பினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


