Sehwag: `நாங்கள் பணக்காரர்கள்; ஏழை நாடுகளுக்குச் செல்லமாட்டோம்! - சேவாக்கின் சர்ச்சை பேச்சு
நாங்கள் ஏழை நாடுகள் நடத்தும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடமாட்டோம் என முன்னாள் இந்திய வீரர் சேவாக் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆனால் இந்திய வீரர்களை மட்டும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட பி.சி.சி.ஐ. அனுமதிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் நடத்தி வருகிற பாட்காஸ்ட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது கில்கிறிஸ்ட், “ இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறீர்கள். ஆனால் அதே மாதிரி ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், இலங்கை போன்ற வெளிநாடுகளில் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஏன் விளையாட இந்திய வீரர்கள் மறுக்கிறார்கள் என்று சேவாக்கிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலிளித்த சேவாக், “ நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். நாங்கள் பணக்காரர்கள். எங்களுக்கு சம்பளம் கொடுக்கின்ற அளவிற்கு அந்த நாடுகள் இல்லை. அவை எல்லாம் ஏழை நாடுகள் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “இங்கிலாந்தில் கிரிக்கெட் லைவ் செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் கமென்ட்ரி செய்ய என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கான ஊதியத்தை உங்களால் கொடுக்க முடியாது என்று சொன்னேன். இருப்பினும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்டார்கள்.
Adam Gilchrist - will Indian players ever be able to access the other leagues? (Club Prairie Fire YT).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 24, 2024
Virender Sehwag - no, why? No need. Were rich people, we dont go to poor countries (laughs). pic.twitter.com/xuU30l5ael
ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய் என்றேன். உண்மைதான் சார் உங்களுக்கு எங்களால் ஊதியம் கொடுக்க முடியாது என்று கூறினார்கள்” என தெரிவித்திருக்கிறார். சேவாக்கின் இந்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தைப் பெற்று வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


