IPL | ஜாம்பவான்கள் கோலி, ரோஹித், சூரியகுமாரை முடக்கிய சந்தீப் சர்மா!

பஞ்சாப் பாடியாலாவைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் அபாரமாக வீசி வரும் ஒரு அற்புத பவுலர்தான் இந்த சந்தீப் சர்மா. தோனி, கோலி, ரோஹித், சூரியகுமார் போன்றோர் மீது வெறி பிடித்து வீழ்ந்து கிடக்கும் இக்கால ஐபிஎல் ரசிகர்களுக்கு சந்தீப் சர்மாவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சந்தீப் சர்மாவுக்கு வயது 31. ஜூலை 17, 2015-ல் இந்திய டி20 அணியில் ரஹானே கேப்டன்சியில் அறிமுகமான இவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 2 நாட்களில் முடிந்து போனது. அதே ஆண்டு ஜூலை 19ம் தேதி கடைசி டி20 போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பயன்படுத்திக் கொள்ளப்படாமலேயே சந்தீப் சர்மா ஒழிக்கப்பட்டு விட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.