பதிரனா எனும் புதிரும், ரோகித்தின் கடைசிநேர மந்த பேட்டிங்கும் | ஐபிஎல் அலசல்
சிஎஸ்கே வெற்றிக்குக் காரணம் ஷிவம் துபே, ருதுராஜ், தோனியின் 3 சிக்சர்கள் ஆகியவற்றில் தோனி என்னும் வர்த்தக முத்திரையைத் தூக்கிப்பிடிப்பது வழக்கம், ஆனால் பதிரனா என்னும் எக்ஸ்-ஃபாக்டர் என்பார்களே அத்தகைய புதிர் பந்து வீச்சுதான் ஒற்றைத்தன்மை கொண்ட சிஎஸ்கே அணிக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
கடைசி ஓவரை ஒருவர் இவ்வளவு மட்டமாக வீச முடியுமா என்றால் அதற்கு ஆமாம் என்பார் ஹர்திக் பாண்டியா. ஏதோ புதிய பவுலர், அனுபவமற்றவர் என்றால் பரவாயில்லை, ஒரு அணியின் கேப்டன், அதுவும் அவர் மீது கண்கொத்திப் பாம்பாக ரசிகர்கள் பார்வை இருக்கும் போது தோனி கிரீசில் இருக்கும் போது என்ன தைரியத்தில் அவர் கடைசி ஓவரை வீச முடியும்? பும்ராவை கடைசி ஓவரை வீசுமாறு எப்போதுமே செய்ய வேண்டும். ஆனால் பாண்டியாதான் விசித்திர ஜீவியாயிற்றே, தன்னால்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர், நேற்று நடந்து விட்டது. அதுதான் தோல்வி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

