“தீவிர பயிற்சியே முக்கியம்!” - ஆட்ட நாயகன் பும்ரா கருத்து

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்ததும், ‘பும்ரா போன்றதொரு பவுலர் எங்கள் அணியில் இல்லை. அதுதான் இரண்டு இன்னிங்ஸுக்கும் இடையிலான வித்தியாசம்’ என ஆர்சிபி கேப்டன் டூப்ளசி சொல்லியிருந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் பும்ரா தான்.

ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா. இதில் 13 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் வீசி இருந்தார். “இந்த நாள் சிறந்த நாளாக அமைந்தது. களத்தில் நான் செய்ய நினைத்ததை செய்தேன். பந்து கிரிப் ஆவதை முதல் ஓவரில் நான் கவனித்தேன். நல்ல லெந்தில் பந்தை வீச விரும்பினேன். கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருவதால் நான் இதற்கு பழக்கப்பட்டவன் ஆகியுள்ளேன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.