“எனக்கு எதிராக மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் சதி” - வினேஷ் போகத் குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் ஒலிம்பிக்கிலும் போட்டியிட்டுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிய தகுதி தொடரின் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான தகுதியை எதிர்நோக்கி உள்ளார். இந்தச் சூழலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


