கேப்டனாக பேட்டிங் செய்வது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை: சொல்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. 138 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 14 பந்துகளை மீதும் வைத்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கேவுக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார்.

சுழலுக்கு சாதகமாக அமைந்திருந்த இந்த ஆடுகளத்தில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் கொல்கத்தா அணியின் ரன்குவிப்பை வெகுவாககட்டுப்படுத்தினார். அதேவேளையில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே இறுதிக்கட்ட ஓவர்களில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரை பெரிய அளவில் ரன்கள் குவிக்க விடாமல் வெளியேற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.