‘எங்களுக்கு ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம்’ - ஹர்திக்
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக 29 ரன்களில் மும்பை வெற்றி பெற்றது. இந்நிலையில், வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.
“நாங்கள் இந்த சீசனில் எங்கள் அணியின் ஆடும் 12 வீரர்களை சில வியூகங்களின் அடிப்படையில் அமைத்து வந்தோம். சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது மிகவும் அவசியமானதாக இருந்தது. அந்த வகையில் இதுவே எங்களது ஆடும் 12 வீரர்கள் அடங்கிய அணியாக இருக்கும் என நம்புகிறேன். மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. அதை டிரஸ்ஸிங் ரூமில் பரஸ்பரம் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


