“என் பொறுமையை சோதிக்காதீர்கள்” - பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி

லாகூர்: உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்ய பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

ஷாஹீன் அஃப்ரிடி தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததை அடுத்து தற்போது மீண்டும் பாபர் அஸமை கேப்டனாக்கியுள்ளது அந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிபி. "எங்கள் நோக்கம் ஒன்றே, அது பாகிஸ்தானை உலகின் சிறந்த அணியாக மாற்ற உதவுவது" என்று ஷாஹீன் அஃப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு பிசிபி இவ்வாறு காரணம் கூறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.