3 டக் அவுட், சொதப்பிய மும்பை வீரர்கள்: ராஜஸ்தானுக்கு 126 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
மும்பை: ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 3 வீரர்கள் ரன் எதுவும் சேர்க்காமல் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். ஆனால் சோகம் என்னவென்றால், டிரெண்ட் போல்ட் வீசிய 5-வது பந்தில் ரோஹித் டக்அவுட். அதுக்கு அடுத்த பந்தே நமன் திர் எல்பிடபள்யூ. ஆக 1 ஓவரில் 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது மோசமான தொடக்கத்தை கொடுத்தது மும்பை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
