டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசியது எப்படி? - மனம் திறக்கும் அவேஷ் கான்
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
186 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லிய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை வீசிய அவேஷ் கான் அற்புதமாக செயல்பட்டு வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


